11 சிறுமிகள் துஷ்பிரயோகம்: பெண் வார்டனின் கணவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

11 சிறுமிகள் துஷ்பிரயோகம்: பெண் வார்டனின் கணவர் கைது!


இரத்தினபுரி, ரக்வான எனும் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் 11 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் மார்ச் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


ரக்வான பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லமொன்றில் 11 சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இரத்தினபுரி சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. இதனடிப்படையில், சிறுவர் இல்லத்தின் வார்டனின் 60 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டு பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமி ஒருவர் 18 வயதை எட்டியதிலிருந்து வார்டன் வீட்டில் தங்கியிருந்தமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் கடுமையாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவத்தின் பின்னர் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்ட இந்த சிறுவர் இல்லத்தின் வார்டனும் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.