செல்பி எடுக்க மறுத்ததால் வாக்குவாதம்: கிரிக்கெட் வீரர் மீது ரசிகர்கள் தாக்குதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

செல்பி எடுக்க மறுத்ததால் வாக்குவாதம்: கிரிக்கெட் வீரர் மீது ரசிகர்கள் தாக்குதல்!

செல்பி எடுப்பதற்கு மறுப்பு தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மற்றும் அவரது நண்பர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மற்றும் அவரது நண்பர் சாப்பிட சென்றுள்ளார். அப்போது இரண்டு ரசிகர்கள் பிருத்வி ஷாவுடன் புகைப்படம் எடுக்க விரும்பினர். அதற்கு பிருத்வி ஷா அனுமதி தந்த பிறகு புகைப்படங்கள் எடுத்தனர். ஆனாலும் கூடுதலாக புகைப்படங்கள் எடுக்க அவர்கள் முயன்றதாக கூறப்படுகிறது.

அதற்கு பிருத்வி ஷா மறுப்பு தெரிவித்தார். அதன்பிறகு தனது நண்பருடன் ஹோட்டல் மேலாளரை அழைத்து ரசிகர்களை வெளியேற்றும்படி கூறியிருக்கிறார். இதனால் அந்த இரண்டு ரசிகர்களும் வெளியேற்றப்பட்டனர். பின்பு பிருத்வி ஷா நண்பருடன் வெளியே வந்த போது அவரை சிலர் பேஸ்பால் மட்டைகளுடன் தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. பிருத்வி ஷாவின் சொகுசு காரில் உள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.

அதன்பிறகு பிருத்வி ஷா வேறு காரில் சென்றுள்ளார். இதுதொடர்பாக பிருத்வி ஷா போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சப்னா கில் என்ற பெண் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.