புதிய மதுவரிக் கட்டளைச் சட்டம் அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய மதுவரிக் கட்டளைச் சட்டம் அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்!

புதிய மதுவரிக் கட்டளைச் சட்டம் கொண்டு வருவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

1912ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மதுவரிக் கட்டளைச் சட்டத்தில் காலத்தின் தேவைக்கேற்ப திருத்தம் செய்ய வேண்டிய தேவை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய அமைச்சரவைத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மதுவரிக் கட்டளைச் சட்டம் மற்றும் புகையிலை வரிச் சட்டத்திற்கு பதிலாக புதிய மதுவரிக் கட்டளைச் சட்டத்தை அறிமுகப்படுத்த நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த யோசனையை சமர்ப்பித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் குறித்த முன்மொழிவு முன்மொழிவாக முன்வைக்கப்பட்டதுடன், அதற்கமைய சட்ட வரைவை தயாரிப்பதற்கு ஒரு வரைவுச் சட்டத்தை உருவாக்குவதற்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.