கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள இருப்போருக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள இருப்போருக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!!


கணினி கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழிநுட்ப கோளாறு சீர் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.


எவ்வாறாயினும், கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஒரு நாள் தாமதத்துடனேயே முன்னெடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


header ads
விளம்பரம்

இதற்கமைய, இந்த வாரம் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள பதிவு செய்துள்ளவர்கள் தாம் பதிவு செய்துள்ள நாளுக்கு, மறுநாள் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வருகைத்தருமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று கடவுச்சீட்டு வழங்குவதில் இடையூறு ஏற்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்திருந்தது.


இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு வழங்குதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.


இதன்காரணமாக நேற்றைய தினம் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு இன்று மதியம் 12.00 மணிக்குப் பின்னர் கடவுச்சீட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,


அதேநேரம் இன்று நேரத்தை ஒதுக்கி கொண்டவர்களுக்கு நாளைய தினம் கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


அத்துடன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளவர்களுக்காக எதிர்வரும் சனிக்கிழமை கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எனினும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கடவுச்சீட்டு விநியோக சேவைகள் வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.