அரச வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட மட்டுப்பாடு!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

அரச வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட மட்டுப்பாடு!


அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் கையிருப்பிலுள்ள வாகனங்களை பயன்படுத்துவதை மட்டுப்படுத்துமாறு திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து பிரதானிகளும் அறிவித்துள்ளார்.


இயன்றளவில் ஒன்லைன் ஊடாக கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்துவதன் மூலம் போக்குவரத்துத் தேவைகள் ஏற்படுவதை மட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


அவ்வாறே, வலய, பிரதேச மற்றும் உப அலுவலகங்கள் மூலம் எளிதில் ஈடுசெய்யக்கூடிய கடமைகள் மற்றும் சேவைகளுக்காக, உரிய அமைச்சுகளின் நிதியை போக்குவரத்து வசதிகளுக்காக பயன்படுத்துவதை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.