துருக்கி நிலநடுக்கத்தில் பலியான இலங்கை பிரஜை!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

துருக்கி நிலநடுக்கத்தில் பலியான இலங்கை பிரஜை!


துருக்கியில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து காணாமல் போன இலங்கைப் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துருக்கியிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.


குறித்த பெண்ணின் சடலம் அவரது மகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.


கண்டி - கலகெதரவில் இருந்து 20 வருடங்களுக்கு முன்னர் துருக்கிக்கு சென்ற, 69 வயதுடைய இலங்கைப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.


கடந்த 06 ஆம் திகதி துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து, அங்கு வசித்துவந்த 15 இலங்கையர்களும் பாதிப்புகள் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.


எவ்வாறாயினும், துருக்கியில் வசித்துவந்த பெண்ணொருவர், நிலநடுக்கத்தின் பின்னர் காணாமல்போயிருந்த நிலையில் அவரை தேடி தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே அவரது சடலம் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.