![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvxqDYvpDtRR79nzS6y5JSNkas3Tme-acVv10OckasSSdOywknMx4-ppLkuSS1jHvu8M-1je27OcR3GDa_rebX64qfm0RZqWp4jYlwjksyO05A-UQqtjrxELwdEMWkhByIVdaDYThL5rMfz_rgz8bFIBeniaDkmklRFoYHGX6T_G6kmdlJ7EF7lR2X/s16000/pa.jpg)
முறைமை கோளாறு காரணமாக கடவுச்சீட்டு வழங்குவதில் தற்காலிக இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
எனவே நாடளாவிய ரீதியில் கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கணனி செயலிழந்ததன் காரணமாக இந்த செயல்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த அமைப்பை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் இணைய சேவைகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு, கணினி செயலிழப்பை ஏற்படுத்தியதாக துறை வெளிப்படுத்தியது.
ஒரு நாள் சேவையின் கீழ் விண்ணப்பித்த கடவுச்சீட்டுகளை தபால் சேவை ஊடாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)