யாழ் மாநகர சபை உறுப்பினரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான ரெமீடியாஸின் இழப்பு மிகவும் கவலைக்குரியதாகும் - பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அனுதாபம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழ் மாநகர சபை உறுப்பினரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான ரெமீடியாஸின் இழப்பு மிகவும் கவலைக்குரியதாகும் - பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அனுதாபம்

யாழ் மாநகர சபை உறுப்பினரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான ரெமீடியாஸின் அகால மரணம் பாரிய கவலையளிக்கின்ற விடயமாகும்.என்னோடு கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டபீடத்தில் ஒன்றாக கல்விகற்ற ரெமீடியாஸ் மிகவும் பண்பான மனிதர்.

பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற காலத்தில் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் பல நன்மையான விடயங்களை செய்தவர்.என்பதோடு தமிழ்,முஸ்லிம் மாணவர்களின் ஐக்கியத்திற்காக என்றும் குரல் கொடுத்தவர்.பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்கு பின்பு தான் பிரதிநிதித்துவம் செய்யும் யாழ் மாநகர மக்களுக்கும் ஏனையவர்களுக்கும் பெரும் நன்மைகளையும் சமூக சேவைகளையும் செய்து இருக்கின்றார். அது மட்டுமன்றி சட்டரீதியாக நலிவுற்ற மக்களுக்கும் பல உதவிகளை செய்து இருந்தார். அதனால் யாழ் மாநகர மக்கள் அவரை மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்தார்கள்.

இவர் ஒரு சில தினங்களுக்கு முன்பு வீதி விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி இன்று அகால மரணம் அடைந்துள்ளார். இவருடைய இழப்பு எமக்கு மிகுந்த கவலையளிக்கின்றது.

இவரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, பிள்ளைகள் குடும்பத்தினர்,மற்றும் யாழ் மாவட்ட மக்களோடு நானும் பங்குகொள்வதுடன் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றேன்.

சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்
பாராளுமன்ற உறுப்பினர்
முன்னாள் இராஜாங்க அமைச்சர்
ஊடகப்பிரிவு


(சர்ஜுன் லாபீர்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.