15 வயதுக்கு உற்பட்ட T-10 கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடர் - மடவளை மதீனா தேசியக் கல்லூரி சாம்பியன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

15 வயதுக்கு உற்பட்ட T-10 கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடர் - மடவளை மதீனா தேசியக் கல்லூரி சாம்பியன்!

8 அணிகள் பங்குபற்றிய 15 வயதுக்கு உற்பட்ட T-10 கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடர் - அபாரமாக விளையாடி மடவளை மதீனா தேசியக் கல்லூரி சாம்பியன் ஆனது.

ஒன்ஸ்லெட் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 8 அணிகள் கொண்ட 15 வயதுக்கு உற்பட்ட T-10 கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடர் பிப்ரவரி மாதம் 14 மற்றும் 15 இரு தினங்கள் உக்குவளை பிரபுத்த கிரிக்கெட் மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் இப்போட்டி தொடரில் அபாரமாக விளையாடிய மடவளை மதீனா தேசியக் கல்லூரி அனைத்து அணிகளையும் வென்று சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இறுதிப்போட்டி அணிக்கு ஐந்து ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மடவலை மதினா தேசியக் கல்லூரி 5 ஓவர்கள் முடிவில் இரு விக்கட்டுகள் இழப்பிற்கு 77 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடிப்பெடுத்தாடிய ரோயல் அகாடமி கலகம் 5 விக்கெட்டுக்களை இழந்தது 39 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது.

38 ஓட்டங்களால் மதினா தேசியக் கல்லூரி வெற்றி பெற்றது.

- Nafees Mohamed
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.