PHOTOS: கண்டி, மடவளை மதீனா பாடசாலையின் ஊடகப் பிரிவின் அங்குரார்ப்பண விழா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: கண்டி, மடவளை மதீனா பாடசாலையின் ஊடகப் பிரிவின் அங்குரார்ப்பண விழா!

கண்டி மாவட்டம் மடவளை மதீனா தேசிய பாடசாலையின் பாடசாலை ஊடகப் பிரிவின் அங்குரார்பண நிகழ்வு இன்று (19) நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அ. ரஹீம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு இன்று நண்பகல் 12 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. ஊடகத்துறையில் சாதிக்க கூடிய மாணவர்களை உருவாக்கும் நோக்கில் மடவளை மதீனா தேசிய பாடசாலையானது ஊடகப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அஷ்ரஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநர் அமான் அஷ்ரப் மற்றும் ஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் யு டிவியின் முன்னாள் பிரதி செய்தி முகாமையாளரும், ஊடகவியலாளருமான ராஷீட் மல்ஹர்டீன் ஆகியோர் இந்த நிகழ்வில் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் பாடசாலை செய்திகளை ஏந்திய சஞ்சிகையொன்று வெளியிடப்பட்டதுடன் பாடசாலையின் ஊடகப்பிரிவின் மாணவர்களால் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த நிகழ்ச்சிகள் அதிதிகளின் கவனத்தையும் ஈர்த்தது மட்டுமல்லாமல் கலந்துகொண்ட அதிதிகளால் அவர்கள் பாராட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.