நானுஓயா விபத்தில் இறந்தவர்கள் பற்றிய தகவலை வெளியிட்ட பொலிஸார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நானுஓயா விபத்தில் இறந்தவர்கள் பற்றிய தகவலை வெளியிட்ட பொலிஸார்!

நானுஓயா விபத்தில் உயிரிழந்த ஏழு பேரில் மூன்று சிறுவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா, நானுஓயாவில் நேற்று மாலை பஸ், முச்சக்கர வண்டி மற்றும் வேன் ஒன்றுக்கு இடையில் விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டி சாரதியுடன் வேனில் பயணித்த ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பஸ்ஸில் கல்விச் சுற்றுலா சென்ற கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் பயணித்துள்ளனர்.

வேனில் பயணம் செய்தவர்களில் 08 வயது மற்றும் 12 வயதுடைய சிறுமிகள் இருவரும் 13 வயது சிறுவர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

26 மற்றும் 27 வயதுடைய மூன்று நபர்களும், 43 வயதுடைய பெண் ஒருவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

வேனில் இருந்து உயிரிழந்தவர்கள் ஹட்டனை சேர்ந்தவர்கள். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.