சிறுநீரக கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறுநீரக கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது !

பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மக்களை பணம் தருவதாக கூறி ஏமாற்றி சிறுநீரக கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரளை பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகள் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மோசடியில் பிரதான தரகராக செயற்பட்ட கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுநீரக கடத்தல்காரர்களுக்கு உதவியதாக கொலன்னாவ மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இரண்டு கிராம சேவை பிரிவுகளின் இரு கிராம உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.