![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2vNl9UD8xo9WKKuA-dzZFewjyjZIFY08crqQFR7df9rkkjM__aliD4Z5bErb3YuvCXOYHcZ-4aETcKREeMldruxPBjaO32jyPUa-hJmKVw0G2TN8SODrc7-SIi1QIBCJlBQS5NNZNzj3tXx_nSE_RI39CeOzVKfGc8ZfzC1Yk6DqnPDbZRw3weimu7Q/s16000/0F8DAFB7-158A-489E-8519-21CDCD857C4F.jpeg)
தோக்கியோவின் நரிடா விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகாவுக்கு சென்று கொண்டிருந்த அந்த விமானம், வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து சுபு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் பயணம் செய்த 136 பயணிகள், 6 சிப்பந்திகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அப்போது சிலர் காயமடைந்தனர். தீவிர சோதனைக்குப் பிறகு விமானத்தில் வெடிபொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை என என்எச்கே ஊடகம் தெரிவித்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.