
சந்தையில் பெருமளவு அதிகரித்துள்ள முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை இன்று (02) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முட்டை தொடர்பில் சந்தையில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் விளக்கமளித்த வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ, முட்டையின் விலையை கட்டுப்படுத்த முட்டையை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரியுள்ளார்.
அதற்கமைய, முட்டைகளை இறக்குமதி செய்ய இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.