டி-56 தானியங்கி துப்பாக்கி தோட்டாவுடன் வெளிநாடு செல்ல முயன்ற நபர் விமான நிலையத்தில் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டி-56 தானியங்கி துப்பாக்கி தோட்டாவுடன் வெளிநாடு செல்ல முயன்ற நபர் விமான நிலையத்தில் கைது!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை கோவிலுக்குச் செல்லச் சென்ற ஒருவர், விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் பார்சலில் டி-56 தானியங்கி துப்பாக்கி தோட்டாவைக் கண்டுபிடித்ததை அடுத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சந்தேக நபர் ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள இந்த கோவிலை தரிசிப்பதற்காக அவர் உள்ளிட்ட யாத்ரீகர்கள் குழு ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

இவர்களில் 20 பேரிடம் 30 கிலோ எடையுள்ள இரும்பு பார்சல் இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

வத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள இரும்புச் சந்தையில் கொள்வனவு செய்து இவற்றை இந்தியாவுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ததாக அந்தக் குழுவினர் பொலிஸாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

இரும்புப் பொதியை வைத்திருந்த நபரிடம் இருந்த அதே பார்சலில் டி56 தோட்டாவும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.