IMF அனுமதி இம்மாதம் கிடைக்காது - ஜனவரியில் கிடைப்பதிலும் சிக்கல் - நந்தலால்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

IMF அனுமதி இம்மாதம் கிடைக்காது - ஜனவரியில் கிடைப்பதிலும் சிக்கல் - நந்தலால்

எதிர்வரும் ஜனவரி மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியை இலங்கை பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு. நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், டிசம்பர் மாதம் நிதியமைச்சகத்தின் அனுமதியைப் பெற முடியாது எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

நிதி உத்தரவாதங்களைப் பெற்றுக்கொள்வதற்காக கடன் வழங்குனர்களுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தற்போதைய நிலைமையை சமாளித்துக்கொள்ள முடியும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடன் வழங்குவோரின் நிதிச் சான்றிதழ்கள் கிடைத்தால், ஜனவரியில் நிதி இயக்குநர் குழு ஒப்புதல் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.