advertise here on top
Join yazhnews Whatsapp Community

அரசுக்கு சவால் விட்ட எல்லே குணவன்ச தேரர்!

பல்வேறு சட்டமூலங்கள் மூலம் பிக்கு மீது கைவைத்து பிக்குவை மௌனமாக்க அரசாங்கத்திற்கு இடமளிக்க மாட்டோம் என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

கோட்டை நாக விகாரையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அவர், அரசாங்கம் சட்டங்களை இயற்றுவதை தேரர்கள் விரும்பவில்லை எனவும், புத்த சாசனத்தில் தேரர்களுக்கு ஏராளமாக விதிமுறைகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மற்றுமொரு புத்தகம் கொண்டு வருவதற்கு தயாராகி வருவதாகவும், தற்போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் பிக்குகள் வந்து பேசுவார்கள் எனவும் அதனை மட்டுப்படுத்த தயாராகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருசில சிறிய விடயங்களினால் விமர்சனங்கள் ஏற்படுவதாகவும், சட்டத்தின் பின்னரே இவ்வாறான பிரச்சினைகள் வரும் எனவும் எல்லே குணவன்ச தேரர் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.