வேலுகுமார் கட்சியில் இருந்து இடைநிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வேலுகுமார் கட்சியில் இருந்து இடைநிறுத்தம்!


2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு இன்றைய தினம் (08) நாடாளுமன்றில் இடம்பெற்றது.


வாக்கெடுப்பில் ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


இதற்கமைய, 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.


இந்த வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வேலுகுமார் ஆகியோர் பங்கேற்கவில்லை.


இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.


தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.