புகையிரதத்தில் கொழும்புக்கு மரக்கறிகள் போக்குவரத்து ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புகையிரதத்தில் கொழும்புக்கு மரக்கறிகள் போக்குவரத்து ஆரம்பம்!

புகையிரதத்தில் கொழும்புக்கு மரக்கறிகள் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம், மரக்கறிகளை கொண்டு செல்வதற்காக புகையிரத திணைக்களத்தின் வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு 5 விசேட புகையிரத பெட்டிகளை தயார் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னோடித் திட்டமாக இது அமுல்படுத்தப்பட்டு, நேற்று (27) பிற்பகல் நானுஓயா புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டைக்கு மரக்கறிகள் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் ஊடாக கொழும்பு பல்பொருள் அங்காடிகள் மற்றும் மெனிங் சந்தைக்கு தேவையான மரக்கறி இருப்புக்கள் அந்த புகையிரதத்தில் கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.