advertise here on top
Join yazhnews Whatsapp Community

ஓய்வை அறிவித்த மெஸ்ஸி.. பைனல் தான் கடைசி என அறிவிப்பு.. "இன்னும் ஒரு முறை சண்டை செய்வோம் "

தோஹா : 2022 ஃபிஃபா உலககோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 6வது முறையாக தகுதி பெற்று அசத்தியுள்ளது.

மகிழ்ச்சி

மேலும், ஆட்டம் முழுவதும் வாய்ப்புகளை உருவாக்கிய மெஸ்ஸி, 2 முறை சிறப்பாக பந்தை சக வீரர் அல்வாரெசிடம் பாஸ் செய்து கோல் போட முடிவு எடுத்தார். இதன் மூலம் அர்ஜென்டினா அணி 3க்கு0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மெஸ்ஸி, இறுதிப் போட்டிக்கு மீண்டும் ஒரு முறை தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

கடைசி போட்டி

என்னுடைய உலககோப்பை பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதுகிறேன். அடுத்த உலககோப்பை இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. அது வரை என்னால் விளையாட முடியுமா என தெரியாது. விளையாடினாலும், இப்படி சிறப்பாக செயல்பட்டு, அணியை பைனலுக்கு வரை கொண்டு செல்வேனா என்றும் தெரியாது.

சாதனை

வரும் 18ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கும். அதில் உலககோப்பையை வென்று தருவேன் என நம்புகிறேன்.உலக கோப்பையில் அர்ஜென்டினாவுக்காக 11 முறை கோல் போட்டு, அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி படைத்துள்ளார்.

கடுமையாக போராடுவோம்

தனது சாதனை குறித்து பேசிய மெஸ்ஸி, சாதனைகள் படைத்தது மகிழ்ச்சி தான். ஆனால், உலககோப்பையை வெல்வதே எங்களுடைய முக்கிய குறிக்கோள். அது தான் அனைத்தையும் விட மிகவும் அழகானது. இன்னும் நாங்கள் ஒரு அடி அருகே தான் இருக்கிறோம். இறுதிப் போட்டியில் இன்னும் ஒரு முறை கடுமையாக போராடுவோம். எங்களால் முடிந்த அனைத்தையும் மேற்கொண்டு இம்முறை கனவை நினைவாக்க பாடுபடுவோம் என்று மெஸ்ஸி கூறினார்.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.