கால்பந்து மன்னன் பீலே காலமானார்.. 3 முறை உலககோப்பை வென்ற ஒரே வீரர்.. ரசிகர்கள் கண்ணீர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கால்பந்து மன்னன் பீலே காலமானார்.. 3 முறை உலககோப்பை வென்ற ஒரே வீரர்.. ரசிகர்கள் கண்ணீர்

கிரிக்கெட்டுக்கு பிராட்மேன், சச்சின் எப்படியோ, அதே போல் கால்பந்து உலகிற்கு பீலே விளங்கினார். தனது அபாரமான ஆட்டத்தால் எதிரணி ரசிகர்களை கூட கவர்ந்த பீலே தற்போது கால்பந்து ரசிகர்களை சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாக்கி சென்று விட்டார்.

16 வயதில் வாய்ப்பு

பிரேசிலில் 1940 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி பிறந்த பீலே இந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். பீலே தனது பதினைந்தாவது வயதில் சாண்டோஸ் அணிக்காக கால்பந்து விளையாட தொடங்கினார். சிறுவயதிலே பலரின் கவனத்தை ஈர்த்ததால் பிரேசில் தேசிய அணியில் தனது 16 வது வயதில் இடம் பெற்றார்.

தொடர்ந்து 2 உலககோப்பை

இதனை தொடர்ந்து தனது 18 வது வயதில் 1958 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடிய பீலே பிரேசில் அணிக்காக கோப்பையை பெற்று தந்தார். இதன் மூலம் இளம் வயதில் உலக கோப்பையில் வென்ற ஒரே கால்பந்து வீரர் என்ற பெருமையும் பீலே பெற்றார். இதனை அடுத்து 1962 ஆம் ஆண்டிலும் பிரேசில் அணி உலக கோப்பை வெல்ல பீலே முக்கிய காரணமாக இருந்தார்.இதனை அடுத்து இரண்டு உலகக் கோப்பையை தொடர்ந்து வென்ற ஒரே வீரர் என்ற பெருமையும் பீலேக்கு சொந்தமானது.

ஒரே வீரர்

பிறகு 1970 ஆம் உலக கோப்பையில் விளையாடிய பீலே பிரேசில் அணிக்கு கோப்பையை வென்று தந்தார். இதன் மூலம் மூன்று முறை உலகக் கோப்பை வென்ற ஒரே கால்பந்து வீரர் என்ற சாதனை அவருக்கு சொந்தமானது. இந்த சாதனை இதுவரை எந்த வீரரும் முறியடிக்கவில்லை.கால்பந்து கிங் என்று அறியப்பட்ட பீலே இதுவரை 1279 கோல்களை தனது கால்பந்து வாழ்க்கையில் அடித்திருக்கிறார். பீலே விளையாடிய காலத்தில் அவர்தான் அதிக சம்பளம் பெற்ற விளையாட்டு வீரராக திகழ்ந்தார். 1977 ஆம் ஆண்டு கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பீலே அன்றிலிருந்து கால்பந்தின் சிறப்பு தூதராக செயல்பட்டார்.

அரசியல் வாழ்க்கை

பீலே வின் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு பல அரசியல் கட்சிகள் அவரை தேர்தலில் களம் இறக்கியது. இதில் பீலே 1995 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை பிரேசிலின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். பீலேக்கு தனது முதுமை வயதில் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனை அடுத்த அதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வயது மூப்பு காரணமாக சிகிச்சைக்கு பீலே வின் உடல் ஒத்துழைக்கவில்லை. கடந்த நவம்பர் 29ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பீலே ஒரு மாத போராட்டத்திற்கு பிறகு தனது உயிரை விட்டார். பீலேக்கு மூன்று முறை திருமணமாகி இருக்கிறது. அவருக்கு மொத்தமாக ஏழு குழந்தைகள் இருக்கிறார்கள்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.