இலங்கை அரசுக்கு IMF விடுத்துள்ள கோரிக்கை - அனைத்து பொருட்களின் விலைகளிலும் மீண்டும் அதிகரிப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை அரசுக்கு IMF விடுத்துள்ள கோரிக்கை - அனைத்து பொருட்களின் விலைகளிலும் மீண்டும் அதிகரிப்பு

டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியை சுதந்திரமாக தீர்மானிக்க அனுமதிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இலங்கை மத்திய வங்கி நாணய மாற்று விகிதங்களை குறிப்பிட்ட வரம்புகளின் கீழ் கட்டுப்படுத்தி வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்துடன் கையாள்வதாயின் அவர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ரூபாயின் மதிப்பு சுதந்திரமாக நிர்ணயம் செய்ய அனுமதிக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் டொலரின் மதிப்பு மீண்டும் உயரும் என்றும், இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலையும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.