![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3ziFMD8_t2e3qyvv5ZAud4XYhSUD02tWWvFQwRLPAmt9ETKvC34YpsZa65enMiPELJGolRPmJgIq8cTDxALFDm3X8EDfNEP2AotxgmnKIAFdIrnzU4TRP_-EMhDcm4JgBj3yqMUuyp5SSKgEWJgv3_En49qivW45633NIvJlK7zSSHRx8OiMuhUUZvQ/s16000/80D3638A-CA62-4CDC-879B-745E3E837957.webp)
எட்டாவது ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கான போட்டி அதிகாரிகள் நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 13 ஆம் திகதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலிய நேரப்படி இரவு 07 மணிக்கு பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ICC ஆண்கள் T20 உலகக் கிண்ண 2022 இன் இறுதிப் போட்டியில் நடுவர்களாக மரைஸ் எராஸ்மஸ் மற்றும் குமார் தர்மசேன ஆகியோர் ஆன்-பீல்ட் நடுவர்களாக கடமைகளை ஏற்றுக்கொள்வார்கள்.
போட்டியின் டிவி நடுவராக கிறிஸ் கஃபேனியும், நான்காவது நடுவராக பால் ரீஃபெல் உம் கடமை புரிவார்கள்.
இறுதிப் போட்டியை போட்டியினை ரஞ்சன் மடுகல்ல தீர்ப்பாளராக கடமை புரிவார்.
இறுதிப் போட்டிக்கான போட்டி அதிகாரிகள்:
போட்டி தீர்ப்பாளர்: ரஞ்சன் மடுகல்ல
கள நடுவர்கள்: மரைஸ் எராஸ்மஸ் மற்றும் குமார் தர்மசேனff
டிவி நடுவர்: கிறிஸ் கஃபேனி
நான்காவது நடுவர்: பால் ரீஃபெல்
(யாழ் நியூஸ்)