advertise here on top
Join yazhnews Whatsapp Community

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ இலங்கை வருகிறார்!

முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) இலங்கை வரவுள்ளார்.

அவர் நாடு திரும்புவதை உறுதிப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், கட்சி மறுசீரமைப்பு உட்பட கட்சி தொடர்பான பல பணிகளில் ஈடுபடுவதற்காக முன்னாள் அமைச்சர் நாடு திரும்பவுள்ளதாக தெரிவித்தார்.

பசில் ராஜபக்ச அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை இலங்கையில் ஏற்பட்ட பொது அமைதியின்மைக்கு மத்தியில் பசில் ராஜபக்ச தனது அமைச்சர் பதவி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். அதன்பிறகு, அவர் செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றார்.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.