அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை கிரிக்கட் அணி - ஆனால் ஒரு நற்செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை கிரிக்கட் அணி - ஆனால் ஒரு நற்செய்தி!

2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் அவுஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தான் அணியினை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி வெளியேறியது.

அவுஸ்திரேலியா அணி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நம்பிக்கை, நாளை சனிக்கிழமை நடைபெறும் இலங்கை-இங்கிலாந்து ஆட்டத்தின் முடிவைப் பொறுத்தே அமையும்.

சனிக்கிழமையன்று இலங்கை அணி இங்கிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே அவுஸ்திரேலியா தகுதிபெற முடியும்.

இலங்கை அரை இறுதி போட்டிகளில் இருந்து வெளியேறினாலும், 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு தானாக தகுதி பெற்றதை தற்போது உறுதி செய்துள்ளது.

இரு குழுக்களிலும் முதல் நான்கு அணிகள் 2022 டி20 உலகக் கோப்பைக்கு தானாகவே தகுதி பெறும். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.