நாளை முதல் சதொச நிறுவனத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை முதல் சதொச நிறுவனத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

நாளை (23) முதல் 4 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.  

அதன்படி, 1 கி லோகிராம் வெள்ளை சீனியின் விலை ரூ. 9 இனாலும்,  1 கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூ. 14 இனாலும், 1 கிலோகிராம்  பூண்டு ரூ. 30 இனாலும், 1 கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 43 இனாலும் குறைக்கப்படவுள்ளது. 

இந்த விலை குறைப்புடன் வெள்ளை சீனி ஒரு கிலோகிராமின் விலை ரூ. 229 ஆகவும், கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலை ரூ. 265 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. 

ஒரு கிலோ வெள்ளைப்பூண்டு ரூ. 495 இற்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 255 இற்கும் கொள்வனவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.