advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்திய அணியினர் உலகக்கோப்பையை வெல்ல வந்துள்ளனர்; ஆனால் நாங்கள்! - பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன்!

8-வது டி20 உலகக்கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உட்பட 16 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன.

பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளுடன் மோதி தொடர் வெற்றியைப் பெற்று வந்த இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது. இதனைத்தொடர்ந்து வங்கதேச அணிக்கும் இந்தியாவிற்கும் நாளை (2.10.2022) போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் "இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. எங்கள் திட்டங்களில் நாங்கள் கவனம் செலுத்த விரும்புகிறோம். இந்தியா அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்தால், அது வருத்தமான விஷயமாகத்தான் இருக்கும். காரணம் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எங்களைவிட சிறந்த அணிகள்.

அதற்காக எங்களால் வெற்றி பெற முடியாது என்று நான் சொல்லவில்லை. அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தியதை நாங்கள் பார்த்திருக்கிறோம். எங்களாலும் அவ்வாறு செய்ய முடிந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். இந்தியா எங்கே விளையாடினாலும், ரசிகர்கள் அவர்களுக்கு சிறப்பான ஆதரவைக் கொடுக்கிறார்கள். இதனால் இரு அணிகளுக்கும் நாளை நடைபெற இருக்கும் போட்டி சுவாரசியமாக இருக்கும். இந்திய அணியினர் உலகக்கோப்பையை வெல்ல இங்கு வந்துள்ளனர். நாங்கள் அதற்காக இங்கு வரவில்லை. நாளைய போட்டியில் இந்தியாவை வீழ்த்த முயற்சி செய்வோம்" என்று கூறியிருக்கிறார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.