நாட்டை விற்ற தந்தையின் அரசியலை புத்திரனுக்கு சொல்லிக் கொடுத்த ஜனாதிபதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டை விற்ற தந்தையின் அரசியலை புத்திரனுக்கு சொல்லிக் கொடுத்த ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆட்சியின் கீழ் அரச நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நஷ்டத்தில் இருப்பவற்றை விற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். இலாபம் தருபவைகளை விற்க வேண்டாம்.. கொள்ளையடிப்பதற்காக விற்காதீர்கள். ஜனாதிபதி பிரேமதாச ஆட்சியில் இந்த நாட்டில் தனியார்மயம் ஆரம்பிக்கப்பட்டது. நானும் ஆரம்பித்து வைத்தேன்.. தொழில் துறை அமைச்சராக.

நாங்கள் முதலில் யுனைடெட் மோட்டார்ஸ் இனை விற்றோம். ஒரு இலாப அமைப்பு. இரண்டாவது சிலோன் ஆக்சிஜன். தோல் (லெதர்) நிறுவனம். டயர் கார்ப்பரேஷன், சிலோன் மில்க் ஃபுட். இவை அனைத்தும் இலாபம் ஈட்டித் தந்தவை. அடுத்ததாக தோட்டக் கம்பனிகள்.

77 இல் திரு. ஜெயவர்தன பொருளாதாரத்தை திறந்து வைத்தார். 89 இல்  பிரேமதாச அடுத்த அடியை எடுத்தார். அதாவது அரசின் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். சில துறைகளை தனியாரிடம் விட்டுவிடுங்கள். இதை நாங்கள் சீனாவில் இருந்து உதாரணமாக எடுத்துக் கொண்டோம். இன்னும் செய்யப் பார்ப்பது இது. அவற்றை இலாபகரமாக மாற்றப் பார்த்தோம்.

நஷ்டம் தருபவற்றை விற்க வேண்டும் என நேற்று திரு.மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். இன்று அவருக்கு ஆதரவாக எதிர்கட்சித் தலைவரும் நஷ்டம் ஏற்படும் நிறுவனங்களை விற்க வேண்டும் என்கிறார். உங்களுக்கு நல்ல பின் தொடர ஒருவர் இருக்கிறார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.