கண்டுபிடிக்கப்பட்ட சுமார் ஒரு மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு பிரஜையின் கைப்பை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டுபிடிக்கப்பட்ட சுமார் ஒரு மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு பிரஜையின் கைப்பை!


வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரின் கைப்பையில் ரூ. 700,000 பெறுமதியான வெளிநாட்டு நாணயம் மற்றும் கமரா ஒன்று பொலன்னறுவை மாவட்டத்தின் கிரிதலேயில் இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு திருப்பி கொடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவானது.


இராணுவத்தினரின் கூற்றுப்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) கிரித்தலேயில் உள்ள அவுகன புத்தர் சிலை வளாகத்திற்கு அருகில் இந்த கைப்பை 2 இலங்கை இராணுவ காவல்துறையின் (SLCMP) கோப்ரல் NEDP நாணயக்காரவால் கண்டுபிடிக்கப்பட்டது.


SLCMP தலைமையகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில், சுமார் ரூ. 700,000 பெறுமதியான வெளிநாட்டு நாணயம் மற்றும் சுமார் ரூ. 300,000, பெறுமதியான ஒரு கேனான் கேமரா மற்றும் பெருவில் வசிப்பவரின் பாஸ்போர்ட், ஒரு பவர் பேங்க் மற்றும் இரண்டு ஏடிஎம் கார்டுகள் கைப்பையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.


அறிவிக்கப்பட்ட பின்னர், கைப்பையின் உரிமையாளர் SLCMP தலைமையகத்தில் இருந்து அவரது அனைத்து பொருட்களுடன் அதை பெற்றுக்கொண்டார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.