
வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரின் கைப்பையில் ரூ. 700,000 பெறுமதியான வெளிநாட்டு நாணயம் மற்றும் கமரா ஒன்று பொலன்னறுவை மாவட்டத்தின் கிரிதலேயில் இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு திருப்பி கொடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவானது.
இராணுவத்தினரின் கூற்றுப்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) கிரித்தலேயில் உள்ள அவுகன புத்தர் சிலை வளாகத்திற்கு அருகில் இந்த கைப்பை 2 இலங்கை இராணுவ காவல்துறையின் (SLCMP) கோப்ரல் NEDP நாணயக்காரவால் கண்டுபிடிக்கப்பட்டது.
SLCMP தலைமையகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில், சுமார் ரூ. 700,000 பெறுமதியான வெளிநாட்டு நாணயம் மற்றும் சுமார் ரூ. 300,000, பெறுமதியான ஒரு கேனான் கேமரா மற்றும் பெருவில் வசிப்பவரின் பாஸ்போர்ட், ஒரு பவர் பேங்க் மற்றும் இரண்டு ஏடிஎம் கார்டுகள் கைப்பையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.
அறிவிக்கப்பட்ட பின்னர், கைப்பையின் உரிமையாளர் SLCMP தலைமையகத்தில் இருந்து அவரது அனைத்து பொருட்களுடன் அதை பெற்றுக்கொண்டார். (யாழ் நியூஸ்)