டெங்கு - 21 MOH பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக பிரகடனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டெங்கு - 21 MOH பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக பிரகடனம்!

இலங்கையில் உள்ள 21 MOH பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அதிக ஆபத்துள்ள 21 MOH பிரிவுகளில் 09 பிரிவுகளில் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

பிலியந்தலை, ஹரிஸ்பத்துவ, உக்குவெல, பதுளை, கேகாலை மற்றும் மாவனெல்ல ஆகிய பிரதேசங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அதியுயர் வலயங்களில் அடங்கும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் 43 ஆவது வாரத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ள நிலையில் மொத்தமாக 143 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் 7,296 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 14,937 ஆக அதிகரித்துள்ளது.

இதன் அடிப்படையில், 7,641 டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 62,435 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40,248 நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.  (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.