படகு விபத்துக்குள்ளானதில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

படகு விபத்துக்குள்ளானதில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி!


சூரியவெவ - மஹவெலிகடர குளத்தில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானமையை அடுத்து நீரில் மூழ்கிய 08 பேரில் காணாமல் போயிருந்த மூவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.


10 வயதுடைய சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


குருநாகல் பகுதியிலிருந்து சூரியவெவ பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றவர்கள் மீன்பிடிப்பதற்காக படகில் சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.


இந்நிலையில் குறித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானமையை அடுத்து நீரில் மூழ்கிய 08 பேரில் மீட்கப்பட்ட 05 பேரின் உடல்நிலை நலமாக உள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


மீட்கப்பட்டவர்களில் 8 மாதக் குழந்தை ஒன்றும் உள்ளது.


காணாமல் போயுள்ள 16 மற்றும் 18 வயதுடைய இரு பெண்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


சூரியவெவ காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு கடற்படையினரையும் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.