இலங்கை நடுத்தர வருமானம் கொண்ட நாடாகவே இருக்கும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை நடுத்தர வருமானம் கொண்ட நாடாகவே இருக்கும்!


இலங்கை ஒரு நடுத்தர வருமான நாடாகவே இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (11) அறிவித்துள்ளது.


இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்த ஒரு மணித்தியாலத்தின் பின்னர், இந்த அறிவித்தலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.


எனினும் குறிப்பிட்ட காலத்துக்கு மாத்திரம் இந்த பின்நோக்கிய கொள்கையை அரசாங்கம் மாற்றுக்கொள்கை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


இலங்கையை குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருந்து குறைந்த வருமானம் கொண்ட நாடாக தரம் தாழ்த்துவதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்று முன்னதாக இன்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.


உலகளாவிய வகைப்பாட்டின் படி இலங்கை ஒரு நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருந்தது.


எனினும் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து சலுகைக் கடன்களைப் பெற முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.


பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தனிநபர் வருமானம் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், அது 2022 இல் மேலும் சரிந்ததாகவும் அவர் வெளிப்படுத்தினார்.


இந்நிலையில் இலங்கைக்கு சலுகைக் கடன் உதவிகளை வழங்குவதற்காக, உலகளாவிய முகவர் நிறுவனங்கள் இலங்கையின் அந்தஸ்தைத் தரமிறக்குமாறு நிதி அமைச்சருக்குப் பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் கூறினார்.


இது உலகின் மிக ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு உதவும் உலக வங்கியின் ஒரு அங்கமான சர்வதேச அபிவிருத்தி சங்கத்திடமிருந்து சலுகை நிதியைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டது.


அந்நிய கையிருப்பு பற்றாக்குறை, பணவீக்கம், கடனை அடைப்பதில் உள்ள சிரமம் உள்ளிட்ட நிதி நெருக்கடிகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.