![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhohsm2PhvjO7l302NkOC4PDAVLqoCDco0k4tZMyVrL39JqixgpwsHFBPsAVoQrXZy_Zz6abvaK8IbTLXs3Lo5otA4NHwZ4ijd23a0gt-ws2detJzAqCXhsELdHzqEybtGScH3JSrVNz9VOlFphlZsl745IiIOd9VXEcXaO30F1BKFW1QSgLWyC9YC3/w640-h422/roti1.webp)
10 ரொட்டிகளும் மென் பானத்துடனான போத்தல் ஒன்றும் 10 ஆயிரம் ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று மாத்தளை பகமூன யா எனும் பகுதியில் பதிவாகியுள்ளது.
மாத்தளை - பகமூன யாய எனும் கிராமத்தில் நடைபெற்ற பஸார் ஏலத்தில் பத்து ரொட்டிகள் மற்றும் ஒரு போத்தல் பானம் பத்தாயிரம் ரூபாவுக்கு ஏலம் போனது.
அங்கு மரண நிகழ்வொன்று இடம்பெற்ற வேளையில் இறுதி சடங்கிற்கு சிலர் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது 2021 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்த்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர், 10 ரொட்டிகளையும் மென்பான போத்தல் ஒன்றினையும் மரண நிகழ்விற்கு வருகை தந்தவர்களிடம் ஏலத்தில் விற்பனை செய்வதாக அறிவித்தார்.
இதனையடுத்து, மரண நிகழ்விற்காக வருகை தந்திருந்தவர்கள் ஒவ்வொரு விலையையும் அறிவித்துக் கொண்டிருக்கையில் வருகை தந்திருந்த ஒருவர் 10 ஆயிரம் ரூபாவை அறிவித்தார்.
இந்நிலையில், ஏலம் நிறுத்தப்பட்டு 10 ரொட்டிகளும் மென்பானமும் 10 ஆயிரம் ரூபாவை கோரியவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பத்து ரொட்டிகள் மற்றும் ஒரு போத்தல் பானம் பத்தாயிரம் ரூபாய்க்கு ஏலம் போனதற்கு இவரது பேச்சு பாணியே முக்கிய காரணம் என எமது செய்தியாளர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)