advertise here on top
Join yazhnews Whatsapp Community

பேச்சுத் திறமையால் 10 ரொட்டிகளை 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற சிறுமி!!


10 ரொட்டிகளும் மென் பானத்துடனான போத்தல் ஒன்றும் 10 ஆயிரம் ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று மாத்தளை பகமூன யா எனும் பகுதியில் பதிவாகியுள்ளது.


மாத்தளை - பகமூன யாய எனும் கிராமத்தில் நடைபெற்ற பஸார் ஏலத்தில் பத்து ரொட்டிகள் மற்றும் ஒரு போத்தல் பானம் பத்தாயிரம் ரூபாவுக்கு ஏலம் போனது.


அங்கு மரண நிகழ்வொன்று இடம்பெற்ற வேளையில் இறுதி சடங்கிற்கு சிலர் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.


இதன்போது 2021 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்த்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர், 10 ரொட்டிகளையும் மென்பான போத்தல் ஒன்றினையும் மரண நிகழ்விற்கு வருகை தந்தவர்களிடம் ஏலத்தில் விற்பனை செய்வதாக அறிவித்தார்.


இதனையடுத்து, மரண நிகழ்விற்காக வருகை தந்திருந்தவர்கள் ஒவ்வொரு விலையையும் அறிவித்துக் கொண்டிருக்கையில் வருகை தந்திருந்த ஒருவர் 10 ஆயிரம் ரூபாவை அறிவித்தார்.


இந்நிலையில், ஏலம் நிறுத்தப்பட்டு 10 ரொட்டிகளும் மென்பானமும் 10 ஆயிரம் ரூபாவை கோரியவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.


பத்து ரொட்டிகள் மற்றும் ஒரு போத்தல் பானம் பத்தாயிரம் ரூபாய்க்கு ஏலம் போனதற்கு இவரது பேச்சு பாணியே முக்கிய காரணம் என எமது செய்தியாளர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.