![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixENQMQ4OJng_NSwoYqZkiyLjIUMVuf8UKJAegIeZng9jQ84mG0pWgL6Idnoc7-Pp76vzZ47tfiTyBayN3OwAVmvy8e4EAa4FrB1S1bH6zl3SUtXgYj-h75esv_pXZhD-qxz8EqrQSyVj6xuHUQWOgd4JYR1MwInRj_9_CrLWtBV7FJItotRxJGzgq/s16000/Kanchana-Wijesekera-fuel.jpg)
எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
"தவறான செய்திகள் மற்றும் அறிக்கைகள் மூலம் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்" என அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பெற்றோலிய விநியோகஸ்தர்களால் மேற்கொள்ளப்படக்கூடிய வேலைநிறுத்தம் குறித்து பதிலளித்தார்.
ஏற்கனவே செலுத்தப்பட்ட செயல்பாட்டுக் கட்டணங்களில் 45% தள்ளுபடியை வசூலிக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் எரிபொருள் விநியோகச் சேவைகளைத் தவிர்ப்பதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் குழு இன்று முன்னதாக அறிவித்தது. (யாழ் நியூஸ்)