இனி தரம் ஒன்றிலிருந்து ஆங்கில பாடத்தை கற்பிக்க நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனி தரம் ஒன்றிலிருந்து ஆங்கில பாடத்தை கற்பிக்க நடவடிக்கை!


சிங்களம் மற்றும் தமிழ்மொழி மூல மாணவர்களுக்கு சட்டக்கல்லூரியில் முதலாம், இரண்டாம் மூன்றாம் ஆண்டுகளில் தத்தமது மொழிகளில் பரீட்சை எழுதக்கூடிய வகையில் வாய்ப்பளிக்கப்பட்டது. எனினும் அது தற்போது, இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திர தெரிவித்தார்.


நாடாளுமன்றில் இன்று இடம்பெறும் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.


இது தொடர்பில் கருத்து தெரிவித்த நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, மாணவர்களின் கோரிக்கைக்கு அமைய தமிழ், சிங்கள மூலம் சட்டக்கல்லூரி பரீட்சை எழுதுவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி கடந்த 2015 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.


எனினும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், அந்த அதிவிசேட வர்த்தமானி செல்லுபடியற்றதாக்கப்பட்டு, மீண்டும் சட்டக் கல்லூரி பரீட்சைகளை 2023 ஆம் ஆண்டு முதல் ஆங்கில மொழியில் எழுத வேண்டுமென அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.


இந்நிலையில் அதனை மாற்றியமைக்குமாறு மாணவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்தனர்.


எனவே, இவ்விடயம் தொடர்பில் ஆராயுமாறு சட்ட ஆய்வுக்குழுவின் தலைவராகவுள்ள, பிரதம நீதியரசரிடம் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. சட்ட ஆய்வுக்குழு முன்வைக்கும் தீர்மானத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


இதனையடுத்து, உரையாற்றிய கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அடுத்த வருடம் முதல், தரம் 1 இல் இருந்து பிரயோக ஆங்கில மொழியை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


உத்தேச கல்வி மறுசீரமைப்பின் ஒரு அங்கமாக இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


நாடாளுமன்றில் இன்று இடம்பெறும் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.