இராஜாங்க அமைச்சரின் வாகனம் மோதியதால் நபரொருவர் படுகாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இராஜாங்க அமைச்சரின் வாகனம் மோதியதால் நபரொருவர் படுகாயம்!

புத்தளத்தில் சனிக்கிழமை (15) அன்று இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

புத்தளம் - குருநாகல் வீதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவ மீது இராஜாங்க அமைச்சரின் வாகனம் மோதியதாக டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

புத்தளம் முள்ளிபுரத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபர், முதலில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், உடல்நிலை மோசமடைந்ததால் குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சரின் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்பில்லாத விடயத்தில், நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவை அடுத்து இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கடந்த வாரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான அழைப்பாணையின் பிரகாரம் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் கடுமையாக எச்சரித்ததை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.