சி.ஐ.டியிடம் ஒப்படைக்கப்பட்ட திலினி பிரியமாலி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சி.ஐ.டியிடம் ஒப்படைக்கப்பட்ட திலினி பிரியமாலி!!

நிதி முறைகேடு குற்றச்சாட்டில் அண்மையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு வர்த்தக பெண் திலினி பிரியமாலி இன்று (12) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 மேலதிக விசாரணைகளுக்காக நான்கு இடங்களுக்கு அழைத்துச் செல்ல பிரியமாலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

திலினி பிரியமாலி தனது அலுவலகம் அமைந்துள்ள கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் காணப்பட்டார். 

உலக வர்த்தக மையத்தில் இருந்தபோது சிறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இருவரும் அவரை அழைத்துச் செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது. 

இலங்கையின் பிரபல வர்த்தகர் ஒருவரிடமிருந்து 226 மில்லியன் அமெரிக்க டொலர்கள், 60, 000 அமெரிக்க டொலர்கள், 100,000 அவுஸ்திரேலிய டொலர்கள் மற்றும் தங்கப் பொருட்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக பிரியாமாலி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

 இதேவேளை, திலினி பிரியமாலியின் வழக்கு தொடர்பான மோசடி நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை அறிந்த பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. 

இது தொடர்பான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ பதிவு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.