நாட்டில் கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

நாட்டில் கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு!


மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கொழும்பில் இன்றைய தினம் (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே காவல்துறை ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.


அத்துடன் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதிக்குள் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.


இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் கார், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி, லாரி, மற்றும் பேருந்து கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் 1,406 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


குறித்த முறைப்பாடுகளில் முச்சக்கர வண்டிகள் கொள்ளைச்சம்பவம் தொடர்பில் 311 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.