![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEia1EptInro0vW-2fhizkosIZWl9sh5agemB1WMp8fF8M9j-zZz43HAdZdmEuiTYcmp7Fv4DyaGwlyky24UtE09xrOF6ZsT798zGiJwN7RDbvrO6WQ-7lZyW1ul7MBO9iwj9njlPEwM3mQzduEeUovyl0CZ1QGiIfr65tn3moni4YOY4fhUdDKEkTLZ/s16000/01-Thilini.jpg)
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய 128 கோடி ரூபாவிற்கும் அதிகமாக மோசடி செய்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்தாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
கொழும்பில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட்ட காவல் துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.
திலினி பிரியமாலிக்கு எதிராக மொத்தமாக 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல் துறை ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.