நாட்டில் அதிகரித்து வரும் வாகன கொள்ளைச் சம்பவங்கள்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் அதிகரித்து வரும் வாகன கொள்ளைச் சம்பவங்கள்!!!

இலங்கை முழுவதும் வாகன கொள்ளைச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி வரை மொத்தம் 1406 வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக எஸ்எஸ்பி தல்துவ தெரிவித்தார்.

இருப்பினும், கடந்த ஆண்டு (2021) முழுவதும் 1405 வாகனக் கொள்ளை சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.

திருடப்பட்ட வாகனங்களில் 12 பேருந்துகள், 25 வேன்கள், 16 லொறிகள், 14 கார்கள், 311 முச்சக்கர வண்டிகள், 116 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 12 வகையான வாகனங்கள் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.

திருடப்பட்ட வாகனங்களில், பல வாகனங்கள் பாதுகாப்பற்ற இடங்களில் நிறுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எஸ்எஸ்பி நிஹால் தல்துவ தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.