ஆசிரியர் பரீட்சைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆசிரியர் பரீட்சைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!


ஆசிரியர் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்களுக்கான பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார்.


ஆசிரியர் பரீட்சைக்காக தகுதி பெற்றுள்ள சகலருக்கும் அதற்கான வாய்ப்பை வழங்குமாறு கோரி ஆசிரியர் பரீட்சைக்கு தோற்ற முடியாத பட்டதாரிகள் சங்கம் கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.


இதன்போது, குறித்த இடத்துக்கு அமைச்சர் பிரவேசித்திருந்தார்.


சகலரும் பரீட்சைக்கு தோற்றும் வகையில் இன்றைய தினம் அமைச்சரவை பத்திரம் ஒன்றிக்கு அங்கிகாரம் பெற்றுக்கொள்ளவுள்ளதாக இதன்போது அமைச்சர் உறுதியளித்துள்ளார்.


எனவே ஆசிரியர்கள் அதற்காக தயாராகுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.