பறிக்கப்பட்ட இஸ்லாம் பாடப் புத்தகத்தை மீண்டும் வழங்குமாறு கல்வி அமைச்சர் உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பறிக்கப்பட்ட இஸ்லாம் பாடப் புத்தகத்தை மீண்டும் வழங்குமாறு கல்வி அமைச்சர் உத்தரவு!

கடந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் ஆட்சியின் போது பாடசாலை மாணவர்களிடையே நடைமுறையில் இருந்த இஸ்லாம் பாடப் புத்தகம் சில தவறான கருத்துக்களை போதிப்பதாக, அன்றைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க மாணவர்களிடமிருந்து திரும்பப் பெறப்பட்டது.

இஸ்லாமிய பாடப் புத்தகங்கள் திருத்தி எழுதப்பட்டு மாணவர்களுக்கு மீண்டும் வினியோகிக்கப்படும் என்ன அன்றைய அரசினால் கூறப்பட்டிருந்தாலும், அது சம்பந்தமாக எந்தவிதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதைத் தொடர்ந்து சில பெற்றார் மற்றும் சில முஸ்லீம் அமைப்புகளும் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்று, நீதிக்கான மையம் என்ற அமைப்பு, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர் அர்க்கம் னூரமித் உப்பட ஒரு குழுவினர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களை சந்தித்து இது விடயமாக கலந்துரையாடினர்.

இதன்போது முஸ்லிம் மாணவர்களுக்கான இஸ்லாம் பாட புத்தகத்தை மீண்டும் வழங்குமாறும், அவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலின் அடிப்படையில் அவர்களுடன் இணைந்து திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சர் உத்தரவிட்டார்.

-பேருவளை ஹில்மி

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.