இணைய கட்டண அதிகரிப்புக்கு எம்மிடம் அனுமதி பெறப்படவில்லை! -தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இணைய கட்டண அதிகரிப்புக்கு எம்மிடம் அனுமதி பெறப்படவில்லை! -தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு


தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிகரித்து அறிவித்துள்ள தொலைபேசி மற்றும் இணைய கட்டணங்களுக்கு அனுமதி பெறப்படவில்லை என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கு அமைய, இன்று முதல் அமுலாகும் வகையில் தமது கட்டணங்களை மீண்டும் அதிகரிக்க அனைத்து தொலைதொடர்பு சேவை வழங்கல் நிறுவனங்களும் தீர்மானித்தன.


இதன்படி, இன்று முதல் தொலைக்காட்சி சேவைகள், முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு கட்டணப் பொதிகள் திருத்தப்படவுள்ளன.


புதிய கட்டணங்கள் தொடர்பிலான தகவல்கள் அந்தந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணையத்தளங்களில் தரவேற்றப்பட்டுள்ளன.


எவ்வாறாயினும், இந்த கட்டண உயர்வு தொடர்பில் இதுவரை எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.