கொரோனா நிதியம் வழங்கும் கணக்கிலக்கம் இடைநிறுத்தப்பட்டது! நிதி விபரம் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா நிதியம் வழங்கும் கணக்கிலக்கம் இடைநிறுத்தப்பட்டது! நிதி விபரம் வெளியானது!


கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஸ்தாபிக்கப்பட்ட இட்டுகம கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.


இதன்படி, சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்துக்கான இலங்கை வங்கியின் கணக்கு இலக்கமான 85737373, அக்டோபர் 18 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் செயலாளர் தாரக லியன பத்திரன பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.


எனவே இனிமேல் இந்த நிதிக்கு பொதுமக்கள் நன்கொடை வழங்க வேண்டாம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


கொவிட்-19 சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு நிதிக்கு மொத்தம் 2,207,164,785.58 (இரண்டு பில்லியன் இருநூற்று ஏழு மில்லியன் நூற்று அறுபத்து நான்காயிரம், எழுநூற்று எண்பத்தைந்து ரூபா மற்றும் ஐம்பத்தெட்டு சதம்) நன்கொடைகளை கிடைத்தன.


இந்தத் தொகையில் 1,997,569,456.56 (ஒரு பில்லியன், தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஏழு மில்லியன், ஐந்நூற்று அறுபத்து ஒன்பதாயிரத்து நானூற்று ஐம்பத்தாறு ரூபா மற்றும் ஐம்பத்தாறு சதம்) கொவிட் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.


இதேவேளை 2022, அக்டோபர் 18, நிலவரப்படி, கொவிட் நிதியில் மீதமுள்ள தொகை 216,877,431.05 (இருநூற்று பதினாறு மில்லியன், எட்டு இலட்சத்து எழுபத்தேழாயிரத்து, நானூற்று முப்பத்தொரு ரூபா ஐந்து சதம்).


இது சத்திரசிகிச்சை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியத்தில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக சமூக பாதுகாப்பு நிதியத்தின் செயலாளர்  தாரக லியனபத்திரன தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.