சட்டவிரோதமாக ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ரீயூனியன் தீவுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சட்டவிரோதமாக ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ரீயூனியன் தீவுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்!

பிரான்ஸ் ரீயூனியன் தீவுகளில் தஞ்சம் புகுந்த இரு இலங்கையர்களும், சட்டவிரோதமாக ஜப்பானில் தங்கியிருந்த மற்றுமொருவரும் செவ்வாய்க்கிழமை (25) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

படகு மூலம் பிரான்ஸ் ரீயூனியன் தீவை அடைந்து சட்டவிரோதமான முறையில் பிரான்ஸுக்குள் நுழைய தயாராக இருந்த இரண்டு இலங்கையர்கள் செவ்வாய்க்கிழமை (25) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆரச்சிக்கட்டுவ, பலுகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரும், பங்கதெனிய, சின்னக்கருவைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

2018ஆம் ஆண்டு இறுதியில் சிலாபத்தில் இருந்து படகு மூலம் பிரான்ஸ் ரீயூனியன் தீவுக்கு சென்றதாகவும், பல்வேறு காரணங்களை கூறி அண்மைக்காலம் வரை அங்கு தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் ஜப்பானுக்குள் நுழைந்து 11 வருடங்களாக அங்கு வசித்து வந்த ஒருவரும் செவ்வாய்க்கிழமை (25) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

2011ஆம் ஆண்டு இரகசியமாக ஜப்பானுக்குச் சென்ற 37 வயதுடைய நபர், நொச்சியாகம, உடுநுவர கொலனியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.