யஹலதென்ன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யஹலதென்ன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யஹலதென்ன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் நேற்று (14) உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் ஒக்டோபர் 14ஆம் திகதி மாலை 6.00 மணிக்கும் மறுநாள் காலை 9.00 மணிக்கும் இடையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 65 வயதுடைய யஹலதன்ன பகுதியைச் சேர்ந்தவர்.

உயிரிழந்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதுடன், கூர்மையன ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டமையினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கண்டி நீதவான் மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.