
எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் (CPC) அனைத்துப் பொருட்களுக்கும் போதுமான அளவு இருப்புக்கள் இருப்பதால், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என அவர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களுக்கான வாராந்திர அந்நிய செலாவணி தேவைகளை இலங்கை மத்திய வங்கி (CBSL) வழங்கியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 2 யூரல் கச்சா சரக்குகளை செலுத்துவதற்கான அந்நிய செலாவணி பற்றாக்குறையால் சுத்திகரிப்பு நிலையத்தை மூடும் முடிவுக்கு இட்டுச் சென்றதாக எரிசக்தி அமைச்சர் விளக்கினார்.
கடந்த 10 நாட்களாக இலங்கை கடற்பரப்பில் இருந்த 100,000 MT ESPO கச்சா எண்ணெய் சரக்குகள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு போதுமான அந்நிய செலாவணி கிடைத்தவுடன் இறக்கப்படும் என்றும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)