ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!


லங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.


இன்று (19) முதல் அமுலாகும் வகையில் இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது..


இதன்படி ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூடு 60 ரூபாவால் குறைக்கப்பட்டு 490 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.


கோதுமை மா 55 ரூபாவால் குறைக்கப்பட்டு 320 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.


நெத்தலி 50 ரூபாவால் குறைக்கப்பட்டு 1450 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.


வெள்ளைச் சீனி 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 260 ரூபாவுக்கு விற்பனை செய்யபடவுள்ளது.


இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி ஐந்து ரூபாவால் குறைக்கப்பட்டு 169 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.


பருப்பு 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 285 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.