ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!


ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட மேலும் இருவர் எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


கொழும்பு - கிங்ஸ்பெரி உணவகத்தின் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவரின் மனைவி மற்றும் அவருடன் தொடர்புடைய மற்றுமொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவரும் இன்றைய தினம் ஸ்கைப் தொலைக் காணொளி வாயிலாக கோட்டை பதில் நீதவான் சிலனி பெரேராவிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.


இதன்போதே குறித்த இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் சிலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.