அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணத்தில் நிவாரணம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணத்தில் நிவாரணம்!!

நாட்டில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. 

மாதாந்தம் 180 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் மத வழிபாட்டுத் தலங்கள் பொதுநோக்கப் பிரிவின் கீழ் கொண்டுவரப்படும் என PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2022 ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் மத வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்படும் மின்சாரக் கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 32/- ஆக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

ஆகஸ்டில் சமீபத்திய மின் கட்டணத் திருத்தத்தைத் தொடர்ந்து, மத வழிபாட்டுத் தலங்களுக்கு யூனிட்டுக்கு ரூ. 65/- கட்டணம் விதிக்கப்பட்டது.    மாதத்திற்கு 180 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் தலங்களுக்கு செல்லுபடியாகும்.

இந்த மாற்றம் 180 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் மத ஸ்தலங்களின் மின்சார கட்டணத்தை பாதிக்கும் அதிகமாக குறைக்கும் என ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.